ADDED : ஏப் 08, 2026 07:45 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இச்சாலையில் வாகன போக்குவரத்து மிகுதியான உள்ளது. வாகனங்கள் அசுர வேகத்தில் செல்லும் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலையை மிகுந்த அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது.
விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்கள் நலன் கருதி அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
