ADDED : ஏப் 02, 2026 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி,கோபி அருகே நாகர்பாளையம், சென்னியப்பா நகர் பகுதியில், கலிங்கியம் பஞ்சாயத்துக்கான குப்பை மலை போல் குவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 8:45 மணிக்கு திடீரென குப்பை தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குப்பை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

