/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தங்க நகை திருட்டுவாலிபருக்கு காப்பு
/
தங்க நகை திருட்டுவாலிபருக்கு காப்பு
ADDED : மே 07, 2026 05:27 AM
பவானி, :சித்தோடு அருகே வசந்தம் பாரடைஸ் பகுதியை சேர்ந்த கலைச்செல்வி, 43, என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு நுழைந்த மர்ம நபர், பத்தே முக்கால் பவுன் தங்க நகையை திருடி சென்றுள்ளார். சித்தோடு போலீசார் அருகில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர், இதில் நகை திருட்டில் ஈடுபட்ட, சித்தோடு கன்னிமார் காடு பகுதியை சேர்ந்த அஜித் குமார், 23, என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கிருஷ்ணகிரியில் பதுங்கி இருந்த அஜித்குமாரை, சித்தோடு போலீசார் கைது செய்து தங்க நகைகளை மீட்டனர். பின்னர், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

