UPDATED : மே 15, 2026 11:16 PM
ADDED : மே 15, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் வேடசந்துார் ஆத்துமேட்டில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர தலைவர் ஜாபர்அலி தலைமை வகித்தார். மேற்கு வட்டார தலைவர் சதீஷ், கிழக்கு வட்டார தலைவர் பகவான் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ரங்கமலை, முரளிகிருஷ்ணன், வடமதுரை வட்டார தலைவர் பாலமுருகன் பங்கேற்றனர்.
