ADDED : டிச 24, 2025 06:19 AM

அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே கோட்டூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் 35. இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தார். அப்பகுதியில் ரோந்து சென்ற வனச்சரகர் ராஜா மற்றும் வனத்துறையினர் அதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். செல்வராஜ் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்த வனத்துறையினர் கைது செய்தனர்.
