ADDED : செப் 28, 2025 03:49 AM

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல்மாவட்டம் ஒட்டன்சத்திரம் வடகாடு அடுத்த கோட்டவெளியில் சிறுத்தை தாக்கியதில் இரு ஆடுகள் பலியாயின.
கோட்டைவெளியை சேர்ந்தவர் மகேந்திரன். வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த சிறுத்தை , ஆடுகளை கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் இறந்தன. இவற்றில் ஒன்றை சிறுத்தை துாக்கி சென்றது.
இதன் அருகில் உள்ள கண்ணனுாரை சேர்ந்த செல்வராஜ் தோட்டத்தில் கட்டி இருந்த மூன்று ஆடுகள் ஆகஸ்டில் சிறுத்தை தாக்கி பலியாகின. வனத்துறையினர் பட்டாசு வெடித்து அதனை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தற்போது சமீபநாட்களாக இப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வீடு தோட்டங்களில் வளர்த்து வரும் நாய், கோழி, ஆடுகளை தாக்கி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.