ADDED : மே 27, 2026 09:43 PM
திண்டுக்கல், ஏப். 29 -
்.
திண்டுக்கல் பழநி ரோட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. பெண்கள் ரேஷன் பொருட்களை வாங்கி டாஸ்மாக் கடை அருகில் உள்ள சந்து வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த சந்தில் குடிமகன்களால் ஏற்படும் இடையூறுகளால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். கடைக்கு 500 மீட்டரில் அரசு பள்ளி, முதன்மை மாவட்ட கல்வி அலுவலம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தொடக்க கல்வி அலுவலகங்கள், பெட்ரோல் பங்க், அங்கன்வாடி மையம் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று காலை 12:05 மணிக்கு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கடையை முற்றுகையிட்டனர். மார்க்சிஸ்ட் கவுன்சிலர் மாரியம்மாள், கணேசன், சிறுபான்மைப்பிரிவு மாநிலக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர் அரபுமுகமது, நகர்குழு உறுப்பினர் கிருஷ்ணன் பங்கேற்றனர்.
