ADDED : மே 15, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி; தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த பள்-ளப்பட்டியில், மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 12ல் இரவு, 8:00 மணிக்கு பூஜை முடிந்து கோவில் பூசாரி ஜம்பேரி, 55, என்பவர் கோவிலை பூட்டிச் சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்-தினம் அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் சென்றனர். அங்கு, அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவன் உண்டியலில் இருந்த, 480 ரூபாயை திருடிச் செல்ல முயன்றது தெரிய வந்-தது. இதையடுத்து, சிறுவனை பிடித்த பொது-மக்கள் இண்டூர் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவனை போலீசார் கைது செய்தனர்.
