/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்
ADDED : செப் 27, 2025 08:41 AM

பரங்கிப்பேட்டை :பரங்கிப்பேட்டையில் 'உங்களுடன் ஸ்டால ி ன்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் துணை சேர்மன் செழியன், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் மயில்வாகணன் வரவேற்றார். தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் முகாமை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அரவிந்தன், கவுன்சிலர்கள் தையல்நாயகி கணேசமூர்த்தி, அருள்முருகன், ஜாபர் ஷரீப், ராஜகுமாரி மாரியப்பன், முன்னாள் துணை சேர்மன் நடராஜன், முன்னாள் துணை செயலாளர் சரவணன், செல்வகுமார், நிர்வாகிகள் பாண்டியன், புருஷோத்தமன், கோமு, அலி அப்பாஸ் பங்கேற்றனர்.
இளநிலை உதவியாளர் தமிழரசி நன்றி கூறினார்.