sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வீட்டுக்குள் புகுந்து விடுகிறது யு.ஜி.டி. கழிவு நீர்

/

வீட்டுக்குள் புகுந்து விடுகிறது யு.ஜி.டி. கழிவு நீர்

வீட்டுக்குள் புகுந்து விடுகிறது யு.ஜி.டி. கழிவு நீர்

வீட்டுக்குள் புகுந்து விடுகிறது யு.ஜி.டி. கழிவு நீர்

1


ADDED : செப் 14, 2025 11:37 PM

Google News

ADDED : செப் 14, 2025 11:37 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 79வது வார்டு பேரூர் மெயின் ரோடு, செல்வபுரம் அருகே கல்லாமேடு, முத்துச்சாமி காலனி, எஸ்.ஏ.கார்டன், தில்லை நகர், லால் பகதுார் சாஸ்திரி ரோடு உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த வார்டில், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் பிரதான பிரச்னையாக இருப்பது, சேத்துமா வாய்க்கால். இதன் தண்ணீர் சிறிய மழை பெய்தாலே வீடுகளுக்குள் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. நான்கு ஆண்டுகளாக இதனால் உயிர் பயத்துடன் தவிப்பதாக, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

கல்லாமேடு பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் பொருட்கள்சரியாக கிடைப்பதில்லை. கண் முன்னே லாரியில் பொருட்கள் கடைக்கு செல்கின்றன. ஆனால், 'சில பொருட்கள் வரவில்லை; போய் வாருங்கள்' என்கின்றனர். முன்பு வீதிகளின் பெயர் குறித்த அறிவிப்பு பலகை நிறுவப்பட்டிருந்தது. அவற்றை மீண்டும் நிறுவ வேண்டும். -முரளி லோடிங் ஒர்க்


சரோஜினிநகர் பகுதியில் அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய்களில், வாட்டம் இல்லாததால் சேத்துமா வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல முடிவதில்லை. ஆங்காங்கே சாக்கடை மேல் பகுதியில், 'ரேம்ப்' அமைத்து உள்ளதால், அடைப்பை சரி செய்யவும் முடிவதில்லை. துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மழை சமயத்தில் மோட்டார் வாயிலாக, வீடுகளுக்குள் செல்லும் தண்ணீரை வெளியேற்றுகிறோம். -செந்தில்குமார் சுயதொழில்


கல்லாமேடு, தென் வடல் வீதியில் சுற்றுப்பகுதி குப்பையை வந்து கொட்டி, துாய்மை பணியாளர்கள் தரம் பிரிக்கின்றனர். துர்நாற்றம் தாங்க முடிவதில்லை. இங்குள்ள சாக்கடையும் அடைபட்டு பல மாதங்களாகிறது. சுடுகாடு செல்லும் வழியும் மோசமாக இருப்பதால் சிரமமாக உள்ளது. சுகாதார பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். -லட்சுமி மளிகை வியாபாரி


'ரிவர்ஸ்' எடுக்கிறது! சரோஜினி நகர் இரண்டாம் வீதியில் தெரு விளக்கு விட்டு விட்டு எரிகிறது. வாய்க்காலில் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. பாதாள சாக்கடை நிரம்பினால், 'மேன் ஹோல்' பகுதியில் இருந்து சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறும் வகையில், குழாய் அமைத்துள்ளனர். மழை காலங்களில் தண்ணீர் 'ரிவர்ஸ்' எடுக்கும் பட்சத்தில், யு.ஜி.டி., தொட்டி நிரம்பி வீடுகளுக்குள் கழிவுநீர் புகுகிறது. -சக்திவேல் சுயதொழில்

'கான்கிரீட் தடுப்பு தேவை'

இந்த வார்டில் வசிக்கும், ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி சேகர் கூறுகையில், ''பேரூர் படித்துறையை கடக்கும் தண்ணீர், ஆண்டிபாளையம் பிரிவில் இருந்து பிரிந்து, சேத்துமா வாய்க்கால் வழியாக, உக்கடம் பெரிய குளத்தை அடைகிறது. இந்த வாய்க்கால் நான்கு ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளது. மழை பெய்தால் எல்.ஐ.சி.நகர், தில்லை நகர், சரோஜினி நகரில் மழை நீர் புகுந்து விடுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இரு புறமும் கரையையொட்டி பக்கவாட்டில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணி துவங்கப்பட்டது. மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், மழை காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. எனவே, கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்,'' என்றார்.



கவுன்சிலர் வசந்தாமணி (தி.மு.க.) சொல்வதென்ன?

சேத்துமா வாய்க்கால் பக்கவாட்டில், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைப்பதற்கான மதிப்பீடு தயாரித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் மக்கள் சாக்கடை மேல்பகுதியில் 'ரேம்ப்' அமைத்துள்ளதால், துாய்மை பணியாளர்களால் முழுமையாக சுத்தம் செய்யமுடிவதில்லை. இதனால், அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேற முடியாமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்களிடம் அலட்சியம் குப்பையை பொது இடங்களில் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இருப்பினும் மக்களிடம் அலட்சியம் நிலவுகிறது. முன்பு, 'மிக்ஸ்டு வேஸ்ட்' எடுக்க தினமும் ஒரு வாகனம் வந்தது. தற்போது வாரம் ஒருமுறை மட்டுமே வருகிறது. தண்ணீர் வெளியேற்றம் மழை காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் செல்வதை தடுக்க, எஸ்.ஏ., கார்டன் பகுதியில் வாய்க்காலையொட்டி, 12 எச்.பி., திறன் கொண்ட தானியங்கி மோட்டார் வாயிலாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மற்ற பிரச்னைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ரோடு போட்டாச்சு எஸ்.ஏ. கார்டன் பகுதியில் மழைநீர் வடிகால் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்தது. தற்போது, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. வார்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளிலும் ரோடு அமைக்கப்பட்டு விட்டது. புதிதாக அங்கன்வாடி போக்குவரத்து வசதிக்காக முத்துசாமி காலனியில் இருந்து, வாய்க்காலை கடக்க இரும்பு பாலம் மற்றும் முத்துசாமி காலனி பஸ் ஸ்டாப்பில் நிழல்கூரை அமைக்கப்பட்டுள்ளது. வார்டில் ஐந்து அங்கன்வாடி மையங்கள், புதிதாக கட்டப்பட்டுள்ளன. புதிய கழிவறைகள் பொதுக் கழிப்பிடமே இல்லாமல் இருந்த நிலையில், இரு பொது கழிவறைகள் கட்டியுள்ளோம். கல்லாமேடு பகுதியில் ரேஷன் கடை அமைக்க, நிதி தருவதாக எம்.பி.தெரிவித்துள்ளார். ஆனால், 'ரிசர்வ் சைட்' எதுவும் இல்லாததால், இடமின்றி கடை அமைக்க முடியவில்லை.








      Dinamalar
      Follow us