sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் சத் பூஜை உற்சாகம்: திரளான பெண்கள் பங்கேற்பு

/

கோவையில் சத் பூஜை உற்சாகம்: திரளான பெண்கள் பங்கேற்பு

கோவையில் சத் பூஜை உற்சாகம்: திரளான பெண்கள் பங்கேற்பு

கோவையில் சத் பூஜை உற்சாகம்: திரளான பெண்கள் பங்கேற்பு


ADDED : அக் 29, 2025 12:41 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னிமடையில் நடந்த சத் பூஜையில், திரளான பெண்கள் பங்கேற்று, இறைவனை வழிபட்டனர்.

பன்னிமடையில் உள்ள கீதா கிருஷி கேந்திராவில், ஆதர்ஷ் உத்தரப்பிரதேசம் சமாஜ் இந்த பூஜையை நடத்தியது. சத் பூஜையின் மூன்றாம் நாள் பக்தர்களும், நோன்பு இருப்பவர்களும் மிக முக்கிய நாளாக கருதுகின்றனர்.

இந்நாளில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள், நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து, தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி, செழிப்புக்காகவும், தங்கள் குழந்தைகளின் நீண்ட நாள் ஆயுளுக்காகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் எனவும், சூரிய பகவானை பிரார்த்தனை செய்வார்கள்.

இந்நாளில் மாலை நேரத்தில் சூரிய கடவுளுக்கு, நீரில் நின்று, தண்ணீரை காணிக்கையாக செலுத்தி, வழி படுவது நல்ல பலன்களை தரும் என்பது நம்பிக்கை.

நிகழ்ச்சியில் தலைவர் ராஜ்குமார் சஹானி அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் அனீஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பவன் சவுராசியா, பொருளாளர் சச்சின், முன்னாள் தலைவர் மனேஸ்வர்சிங், நிர்வாக உறுப்பினர் முகேஷ் சுக்லா, சஞ்சய் குமார் துபே, சுனில் சிங், அனில் சிங் மற்றும் பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உ.பி., பீகார் மற்றும் ஜார்கண்டிலிருந்து குடியேறிய இந்தி பேசும் மக்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us