ADDED : ஜூன் 18, 2026 03:33 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மாநகராட்சியில் அடையாறு, வளசரவாக்கம், தெற்கு வட்டார இணை கமிஷனர் அலுவலகம், மேம்பால கட்டுமான பிரிவு உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்த, ஏழு உதவி செயற்பொறியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மாநகராட்சி மின்சார துறையில், வளசரவாக்கம், தண்டையார்பேட்டை, வடக்கு வட்டார இணை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்த நான்கு உதவி செயற்பொறியாளர்கள், மற்ற மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில், கூடுவாஞ்சேரி உதவி கமிஷனராக இருந்த ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் மாற்றப்பட்டு, அவருக்கு பதில், பாதுகாப்பு பிரிவில் இருந்த சேகர் பாபு என்பவர், கூடுவாஞ்சேரி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், தாம்பரம், சேலையூர் என, மொத்தம் ஏழு உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
