sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

/

நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

நில அளவீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்


ADDED : செப் 16, 2025 11:51 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர்:பவுஞ்சூரில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த நபர், திடீரென தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பவுஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், 60. இவருக்கும், சித்தாமூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், 1.5 சென்ட் வீட்டு மனை தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. செய்யூர் நீதிமன்றத்தில், இதுதொடர்பாக வழக்கும் நடந்து வருகிறது.

இந்நிலையில், நிலத்தை அளவீடு செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற லோகநாதன் தரப்பினர், 30க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினருடன் வந்து, நேற்று நிலத்தை அளவீடு செய்ய முயன்றனர்.

அப்போது, செய்யூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், இடத்தை அளவீடு செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த உதயகுமார், உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றார்.

உடனே, அங்கிருந்த போலீசார், தற்கொலை முயற்சியை தடுத்ததுடன், உதயகுமார் மற்றும் அவரது மருமகன் அருணை கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us