ADDED : செப் 26, 2025 09:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ: டோக்கியோ டென்னிஸ் அரையிறுதிக்கு போபண்ணா-டகெரு ஜோடி முன்னேறியது.
ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் 45 வயது போபண்ணா, ஜப்பானின் டகெரு யுஜுகி ஜோடி, அர்ஜென்டினாவின் மேக்சிமோ கொன்சாலஸ், ஆன்ரெஸ் மால்டெனி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 'டை பிரேக்கர்' வரை நீண்டது. இதை போபண்ணா ஜோடி 7-6 என வசப்படுத்தியது. அடுத்து நடந்த இரண்டாவது செட்டும் 'டை பிரேக்கருக்கு' செல்ல, இதையும் போபண்ணா ஜோடி 7-6 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம், 49 நிமிடம் நடந்த போட்டி முடிவில் போபண்ணா ஜோடி 7-6, 7-6 என நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.