ADDED : மே 16, 2026 11:11 PM

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
பாங்காக்கில், தாய்லாந்து ஓபன் 'சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 'நம்பர்-3', மலேசியாவின் கோ பெய், நுர் இஜுதீன் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 19-21 என இழந்தது. பின் சுதாரித்த இந்திய ஜோடி அடுத்த செட்டை 22-20 என போராடி கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி செட்டையும் 21-16 என வென்றது.
ஒரு மணி நேரம் 22 நிமிடம் நீடித்த போட்டி முடிவில் இந்திய ஜோடி 19-21, 22-20, 21-16 என்ற கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று இந்தோனேஷியாவின் லியோ ரோலி, டேனியல் மார்தின் ஜோடியை எதிர்கொள்கிறது.
