ADDED : ஏப் 13, 2026 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாச மாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம், பாக்கம், கிராமத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி, 34, என்பவர் குடி போதையில், மங்கலம் சிமென்ட் களம் பகுதியில் நின்று கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

