ADDED : ஜூன் 23, 2026 12:19 AM

நெட்டப்பாக்கம்: சொர்ணாவூர் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் விழா நாளை நடக்கிறது.
சொர்ணாவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதையொட்டி காலை யாகசாலை வாஸ்து, மகாசாந்தி ஹோமம் நடந்தது.
நேற்று காலை 7.00 மணிக்கு புண்யாகவாசனம், நித்யஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறை தீர்த்தம், மாலை 5.30 மணிக்கு புண்யாகவாசனம், சாற்றுமுறை தீர்ததம் நடந்தது. வரும் 24ம் தேதி காலை 4.30 மணிக்கு ததுக்த ஹோமம் தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிேஷகம் விழா நடக்கிறது. தொடர்ந்து வேத சாற்றுமுறை, திவ்யபிரபந்த சாற்றுமுறை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
