/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா - ராஜிவ் சிக்னல் மேம்பாலம் திட்டத்திற்கு... ரூ.436 கோடி: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல்
/
இந்திரா - ராஜிவ் சிக்னல் மேம்பாலம் திட்டத்திற்கு... ரூ.436 கோடி: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல்
இந்திரா - ராஜிவ் சிக்னல் மேம்பாலம் திட்டத்திற்கு... ரூ.436 கோடி: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல்
இந்திரா - ராஜிவ் சிக்னல் மேம்பாலம் திட்டத்திற்கு... ரூ.436 கோடி: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல்
ADDED : செப் 18, 2025 03:02 AM

புதுச்சேரி: இந்திரா சிக்னல் - ராஜிவ் சிக்னல் மேம்பாலம் திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ரூ.436 கோடிக்கு ஒப்புதல் தந்துள்ளது. புதுச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. முக்கிய சிக்னல்கள் அனைத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நத்தையை போல் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
எனவே போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய மேம்பாலங்கள் கட்டுவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்பதால், இந்திரா சிக்னல் - ராஜிவ் சிக்னலை இணைத்து மேம்பாலம் கட்ட புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
அதற்கான, விரிவான திட்டத்துடன் கருத்துருவாக்கம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு, மத்திய சாலை அமைச்சகமும் ஒப்புதல் தந்த நிலையில் புதிய மேம்பாலம் கட்டப்படவில்லை. இத்தனைக்கும் மத்தியிலும், மாநிலத்திலும் இணைக்கமான ஆட்சி நடந்து வரும் சூழ்நிலையிலும், மேம்பால பணிகளில் துவங்கப்படவில்லை.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள புதுச்சேரியின் மேம்பாலம் கட்டுமானம் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ரங்கசாமி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தி இருந்தார்.
அதை தொடர்ந்து, புதுச்சேரி உட்கட்டமைப்பு திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தனி கவனம் செலுத்தியது. மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகளை புதுச்சேரிக்கு அனுப்பி ஆய்வு நடத்தியது. சில ஆலோசனைகளையும் வழங்கியது. இந்நிலையில் இந்திரா சிக்னல் - ராஜிவ் சிக்னல் மேம்பால திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் 436.18 கோடிக்கு ஒப்புதல் தந்துள்ளது. இந்த மேம்பாலம் 3.877 கிலோ மீட்டர் துாரத்திற்கு பிரமாண்டமாக அமைய உள்ளது.
புதிய மேம்பாலம் 5.5 மீட்டர் உயரத்திலும், 15 மீட்டர் அகலத்திலும் ராஜிவ் சிக்னல் முதல் இந்திரா சிக்னல் வரை கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.