ADDED : மார் 18, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மனுத்தாக்கல் செய்ய 2வது நாளிலும் யாரும் வரவில்லை.
புதுச்சேரியின் 16வது சட்டசபைக்கான தேர்தல் அறிவிப்பை கடந்த 15ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 9ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அதனையொட்டி, தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இரண்டாம் நாளான நேற்றும் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
