/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுமை! பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எரிபொருள்... புதுச்சேரி உள்ளாட்சித்துறை அதிரடி திட்டம்
/
புதுமை! பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எரிபொருள்... புதுச்சேரி உள்ளாட்சித்துறை அதிரடி திட்டம்
புதுமை! பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எரிபொருள்... புதுச்சேரி உள்ளாட்சித்துறை அதிரடி திட்டம்
புதுமை! பிளாஸ்டிக் குப்பையில் இருந்து எரிபொருள்... புதுச்சேரி உள்ளாட்சித்துறை அதிரடி திட்டம்
ADDED : அக் 20, 2025 10:36 PM

புதுச்சேரியில் தினமும் 350 டன் குப்பை உற்பத்தியாகின்றன. அவை, குருமாம்பேட் எரு கிடங்கில் கொட்டி மறுசூழற்சி செய்து அகற்றப்படுகின்றது. இருப்பினும் தொடர்ந்து குவியும் பிளாஸ்டிக் குப்பையை அகற்றுவது சவாலாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கும்அச்சுறுதலாக மாறுகின்றது.
இந்நிலையில், நகரப்பகுதிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி, பைரோலிசிஸ் எண்ணெய் தயாரித்து முற்றிலுமாக பிளாஸ்டிக் குப்பையை அகற்ற அரசு, உள்ளாட்சி துறை வாயிலாக திட்டமிட்டுள்ளது.இதற்காக ரூ.6 கோடி செலவில் சீனாவில் இருந்து கொண்டு வந்துள்ள இரண்டு ராட்சத ரியாக்டர்கள் கொண்ட பைரோலிசிஸ் ஆலையை, குரும்பாபேட்டில் கிரீன் வாரியர் நிறுவனம் மூலம் நிறுவியுள்ளது.
தலா 30 டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை மறுசூழற்சி செய்யும் திறன் கொண்ட, இவ்விரண்டு ரியாக்கடர் மூலம் தினமும் 60 டன் பிளாஸ்டிக் கழிவுகளை பைரோலிசிஸ் எண்ணெய் தயாரிக்க முடியும்.
முதற்கட்டமாக ஒவ்வொரு ரியாக்டருக்கும் 15 டன் பிளாஸ்டிக் குப்பையை செலுத்தி மொத்தம் 30 டன் அளவிற்க மறுசூழற்சி செய்து, அதன் மூலம் தினசரி 6 டன் பைரோலிசிஸ் எண்ணெய் உற்பத்தி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைரோலிசிஸ் எண்ணெய் தயாரிப்பு காற்று அல்லது ஆக்சிஜன் இல்லாத சூழலில், 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் நடக்கும் ஒரு தெர்மல் டிகம்ேபாசிஷன் எனும் வெப்ப வேதிப்பிளவு செயல்முறை ஆகும். இந்த செயல்பாட்டின் போது உயிரிச் சேர்மங்களில் உள்ள நீளமான ஹைட்ரோ கார்பன் சங்கிலிகள் உடைந்து, வாயுக்கள், திரவமாக குளிரக்கூடிய நீராவி போன்ற சிறிய மூலக்கூறுகளாக மாறுகின்றன.
உற்பத்தியாகும் பைரோலிசிஸ் எண்ணெய், சிமெண்ட் தொழிற்சாலைகளில் எரிபொருளாக பயன்படுத்த லிட்டர் ரூ.45 முதல் ரூ50 வரை விற்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பைரோலிசிஸ் எண்ணெய் லிட்டருக்கு ரூ.55க்கு விற்கப்படுகிறது.
எனவே பிற மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் புதுச்சேரியின் பக்கம் பார்வை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புதிய ஆலை மூலம் புதுச்சேரியில் ஆண்டிற்குகுறைந்தது 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்ய முடியும்.இந்த ஆலை அமைக்கும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல்இந்த ஆலையை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.