ADDED : மே 20, 2026 04:40 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கொத்தபுரிநத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கொத்தமபுரிநத்தம் ரைஸ் மில் பகுதியில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அங்குள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் திருபுவனை பகுதியைச் சேர்ந்த செல்வம் 76, என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, கடையில் இருந்த 1.6 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
