ADDED : மே 05, 2026 02:45 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி உழவர் கரை தொகுதி வெற்றி வெளியிட இரவு வரை சென்றதால் பரபரப்பு நிலவியது.
உழவர்களை தொகுதியில் மொத்தம் 40,278 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தபால் ஓட்டுகளுடன் சேர்த்து உழவர்கரையில் 35,893 ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.
அனைத்து தொகுதிகளும் எண்ணப்பட்ட நிலையில், உழவர்கரை தொகுதி மட்டும் இறுதி யாக இரவு 10:15 மணிக்கு கடைசி சுற்று முடிவு அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட தொகுதிகளிலேயே முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 35 ஆயிரம் ஓட்டுகளை எண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
