ADDED : மே 30, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, நாளை தேரோட்டம் நடக்கிறது.
புதுச்சேரி, காந்தி வீதி வரதராஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை திருக்கல் யாண உற்சவம் நடந்தது.
நேற்று வீதியுலா நிகழ்ச்சியை அடுத்து நாளை (31ம் தேதி) காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
இரவு 8:00 மணிக்கு துவஜா அவரோகணம், சாற்றுமுறை நடக்கிறது. நாளை மறுநாள் (1ம் தேதி) காலை 10:00 மணிக்கு 108 கலச திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சந்திரபிரபை சுவாமி வீதியுலா நடக்கிறது.
