/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ., மகளிரணி கருத்து சேகரிப்பு

 பா.ஜ., மகளிரணி கருத்து சேகரிப்பு

 பா.ஜ., மகளிரணி கருத்து சேகரிப்பு

 பா.ஜ., மகளிரணி கருத்து சேகரிப்பு

 பா.ஜ., மகளிரணி கருத்து சேகரிப்பு

ADDED : பிப் 19, 2026 05:14 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., நகர மாவட்ட மகளிரணி சார்பில், 'உங்கள் கருத்து எங்களின் வாக்குறுதி' என்ற தலைப்பில் பொதுமக்களிடம் கருத்து சேகரிப்பு நிகழ்ச்சி முதலியார்பேட்டையில் நடந்தது.

பா.ஜ., மகளிரணி மாவட்ட தலைவி அனுராதா ராஜகோபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், பா.ஜ., மாவட்ட தலைவர் கிருஷ்ணாராஜ் கலந்து கொண்டனர்.

துணை தலைவர் விஜயகுமார், மகளிரணி மாநில தலைவி தாமரைசெல்வி, முதலியார்பேட்டை தொகுதி தலைவர் புவனேஸ்வரி, மன் கீ பாத் பொறுப்பாளர் வெற்றி செல்வன், மகளிரணி பொது செயலாளர்கள் விஜயலட்சுமி, பிரியா, துணை தலைவி மஞ்சு, தமிழ்செல்வி, நகர மாவட்ட மகளிரணி துணை தலைவி அனிதா, செயலாளர் ரோகிணி, அங்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.