sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

/

 புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

 புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

 புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 


ADDED : ஏப் 17, 2026 06:19 PM

Google News

ADDED : ஏப் 17, 2026 06:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தலைமையாசிரியை நான்சி ஏஞ்சலின் தலைமை தாங்கினார். பின்னாச்சிக்குப்பம் துணை சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சூரியபிரபு தலைமையிலான மருத்துவ குழுவினர் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர்.

புகையிலை பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதி மாணவர்களிடம் பெறப்பட்டது. மேலும், புகையிலை பயன்படுத்துபவரை கண்டால், அவர்களை விட்டு விலகுவது நம் உடல் நலத்திற்கு நல்லது என்பது விவரிக்கப்பட்டது.

புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பற்றிய பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இதில், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி மாணவர்களும், ஆசிரியர்களும், முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரகுநாதன், செல்வி வர்ஜினா, யோகானந்தன், ராஜலட்சுமி, லோகேஸ்வரி, பூங்கொடி, ரஹானா, பிரதீபா ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us