ADDED : மே 08, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே மின் கம்பத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சின்னதுரை, 31; கூலித் தொழிலாளி. அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மின் விநியோகம் பாதித்தது. நேற்று காலை 11:30, மணிக்கு, மின் கம்பத்தில் பழுது நீக்குவதற்காக சின்னதுரை கம்பத்தில் ஏறினார். அப்போது அவரது தோளில் மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து கம்பத்திலேயே தொங்கிய நிலையில் இறந்தார்.
புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
