ADDED : மே 12, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் கடந்த 9ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
