ADDED : மே 10, 2026 07:31 PM
புதுச்சேரி: மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றுள்ள சுவேந்து அதிகாரிக்கு, ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ள அவர் விடுத்துள்ள அறிக்கை:
மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றுள்ள சுவேந்து அதிகாரிக்கு, புதுச்சேரி மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கு வங்க மக்கள் உங்கள் தலைமையின் மீதும், சேவையின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பே உங்களின் வரலாற்று வெற்றியாகும்.
மேற்கு வங்கமும், புதுச்சேரியும் வளமான பாரம்பரியத்தையும், வளர்ச்சி மற்றும் செழுமைக்கான பரஸ்பர விருப்பத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. உங்கள் திறமையான நிர்வாகத்தின் கீழ், மேற்கு வங்கம் வளர்ச்சி, அமைதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்தை காணும் என நம்புகிறேன்.
எங்கள் இரு பிராந்தியங்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், வளர்ந்த இந்தியாவின் பார்வைக்கு ஒன்றாக பங்களிக்கவும் உங்களுடன் ஒத்துழைக்க நான் எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
