ADDED : ஜூன் 15, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: ரயிலில் அடிப்பட்டு இறந்த நபரை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனுார் ரயில் நிலையம் அருகில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் சென்ற ரயிலில், 60; வயது மதிக்கதக்க நபர் அடிப்பட்டு இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
