ADDED : மே 24, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஏம்பலத்தில் வீட்டில் இருந்த பள்ளி மாணவர் மாயம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏம்பலம் டி.வி.நகரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் பொது சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் திவின்குமார், 17; பிளஸ் 1 முடித்துதுவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலை வீட்டில் இருந்தவர், திடீரென காணவில்லை. இவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
