sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒரு செடி; ஒரு உறுதிமொழி மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஒரு செடி; ஒரு உறுதிமொழி மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஒரு செடி; ஒரு உறுதிமொழி மரக்கன்று நடும் நிகழ்ச்சி


ADDED : மே 14, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 07:11 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் பசுமைப் பூங்கா அமைக்கும் முயற்சியாக, ‘ஒரு செடி, ஒரு உறுதிமொழி’ இயக்கத்தின் மூலம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். அரசின் வணிக வரித்துறைச் செயலர் சவுத்ரி முகமது யாசின், கலெக்டர் குலோத்துங்கன், போலீஸ் டி.ஜி.பி., ஷாலினி சிங், அரசின் தலைமை வனப் பாதுகாவலர் அருள்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பசுமைப் பூங்கா அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

என்.சி.சி., குழுத் தலைமையக கமாண்டண்ட் ஆஷிஷ் திவாரி, புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் கல்லுாரி மேம்பாட்டுச் சபையின் தலைவர் சுடலை முத்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநர் முத்து மீனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us