ADDED : மே 03, 2026 09:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: பொதுஇடத்தில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது தட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 44, என்பவர், மது போதையில், மடுகரை – பட்டம்பாக்கம் சாலை, தனியார் கம்பெனி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார்.
அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

