UPDATED : மே 17, 2026 11:51 AM
ADDED : மே 17, 2026 11:52 AM
கோவை:
ஈரோடு, பாரதியார் பல்கலை முதுலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில், முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.
எம்.ஏ., தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம், எம்.எஸ்.சி., கணிதம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., கணினி அறிவியல் படிப்புகளுக்கு https://fms.b-u.ac.in/pg-centre-admission என்ற இணையதளத்தில் வரும் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சான்றிதழ்களை இணைத்து, 'இயக்குனர் (பொ), பாரதியார் பல்கலை முதுகலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம், ஈரோடு' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி கலந்தாய்வு மூலமாக அல்லது நேரடியாக நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
