தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கவுரவ விரிவுரையாளர்கள் 1,000 பேர் நியமிக்க திட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் 1,000 பேர் நியமிக்க திட்டம்

கவுரவ விரிவுரையாளர்கள் 1,000 பேர் நியமிக்க திட்டம்


UPDATED : ஜூன் 20, 2026 02:29 PM

ADDED : ஜூன் 20, 2026 02:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 02:29 PM ADDED : ஜூன் 20, 2026 02:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், புதிதாக 1,000 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க, உயர் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 7,500க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

சில மாதங்களுக்கு முன், 1,703 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது, பல கல்லூரிகளில், புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், பேராசிரியர் பற்றாக்குறை அதிகரித்து உள்ளது.

எனவே, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் வைத்து, நிரந்தரப் பேராசிரியர்களை நியமனம் செய்யும் வரை, கூடுதலாக, 1,000 கவுரவ விரிவுரையாளர்களை புதிதாக நியமிக்க, தமிழக உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us