UPDATED : ஏப் 04, 2026 04:04 PM
ADDED : ஏப் 04, 2026 04:05 PM
கமுதி:
கமுதியில் கவுரவ தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
தற்போதுள்ள நிலையில் ஏராளமானோர் ஆங்கில வழிக் கல்வி தேடி செல்கின்றனர். இதையடுத்து தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம் சார்பில் நடப்பாண்டில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் நாககுமார், பொருளாளர் ஞானஜெயகுரு, கவுரவ உறவின் முறை டிரஸ்ட் பூபால சண்முகம், பாலமுருகன், ஹேமேந்திர பாலன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் மாரி மகேஸ்வரி வரவேற்றார். 11 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டது.
ஆசிரியர்கள் சுப்புலட்சுமி, மகேஸ்வரி, கிருஷ்ணவேணி உட்பட பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ் வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட கவுரவ தொடக்கப் பள்ளி நிர்வாகத்தினரை பெற்றோர் பாராட்டினர்.

