தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்

 விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்

 விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்


ADDED : ஜன 16, 2026 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: மும்பையில் இருந்து தாய்லாந்து செல்லும், 'இண்டிகோ' விமானத்தின் பைலட், தன் பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி விமானத்தை இயக்க மறுத்ததால், விமான ஊழியர்களுடன் பயணியர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் இருந்து, தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் கராபி தீவுக்கு, நேற்று முன்தினம் அதிகாலை 4:05 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இந்நிலையில், தன் பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி விமானி அந்த விமானத்தை இயக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பயணியர், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட களேபரத்துக்கு பின் விமானம் புறப்பட்டது. காலை 1:00 மணிக்கு கராபி சென்றடைய வேண்டிய விமானம், மதியம் 1:00 மணிக்கு தரையிறங்கியது.

இது குறித்து இண்டிகோ நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:

மும்பைக்கு வரவேண்டிய விமானம் தாமதமாக வந்தது, வான்வழி போக்குவரத்து நெரிசல், பணியாளர்களின் பணி நேரம் முடிந்தது போன்ற காரணங்களால் விமானம் தாமதமானது. விமானத்தில் இரு பயணியர் முறைகேடாக நடந்து கொண்டனர். அவர்களை பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்ததாலும் விமானம் தாமதமானது. பயணியர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதே எங்கள் நோக்கம். பயணியருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us