ADDED : மே 16, 2026 11:54 PM

தவிர்க்க முடியாதது! உலகளாவிய நெருக்கடி காரணமாகவே, எரிபொருள் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது தவிர்க்க முடியாதது. இந்த விலை உயர்வுக்கு பின்னால் உள்ள சூழலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்பி, அரசுக்கு எதிராக மக்களை எதிர்க்கட்சிகள் துாண்டிவிடுகின்றன.
கிஷன் ரெட்டி மத்திய அமைச்சர், பா.ஜ.,
மரண சாசனம்! அடுத்த ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது, நகைத் துறைக்கு எழுதப்பட்ட மரண சாசனம். நாட்டின் ஏற்றுமதிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் இத்துறையை சார்ந்த 3.5 கோடி மக்களுக்கு, சிறப்பு பொருளாதார தொகுப்பு நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்
ரன்தீப் சுர்ஜேவாலா பொதுச்செயலர், காங்.,
ஓட்டு வங்கி அரசியல்!
கர்நாடகாவில், கல்வி நிறுவனங்களில் காவி துண்டுக்கு அனுமதி மறுத்து, சனாதனத்தை இழிவுப்படுத்திய காங்கிரஸ், ஹிந்துக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துள்ளது. ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சி, ஓட்டு வங்கி அரசியலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளது.
செஷாத் பூனாவாலா செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
