sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ 'வி.பி., ஜி ராம் ஜி' சட்டத்துக்கான வரைவு விதிகள் வெளியீடு

 'வி.பி., ஜி ராம் ஜி' சட்டத்துக்கான வரைவு விதிகள் வெளியீடு

 'வி.பி., ஜி ராம் ஜி' சட்டத்துக்கான வரைவு விதிகள் வெளியீடு


ADDED : மே 24, 2026 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 12:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: நுாறு நாள் வேலை திட் டத்துக்கு மாற்றாக, 'வி.பி., ஜி ராம் ஜி' திட்டம் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதையொட்டி, இச்சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட வரைவு விதிகளை கருத்து கேட்புக்காக மத்திய அரசு பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.

ஆலோசனை மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு மாற்றாக, ' வி.பி., ஜி ராம் ஜி' என்ற திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, ' வி.பி., ஜி ராம் ஜி' சட்டம், 2025 நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, பிரிவு 33 மற்றும் அது தொடர்பான ஷரத்துகள் கட்ட மைக்கப்பட்டு, அதற்கான வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், வல்லுநர்களின் ஆலோசனைக்காக இந்த வரைவு விதிகளை மத்திய அரசு பொதுவெளியில் நேற்று வெளியிட்டது.

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்ட இந்த வரைவு முன்மொழிவுகளில் திட்டத்தை நாடு முழுதும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தேசிய அளவிலான வழிகாட்டுதல் மற்றும் மத்திய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவு கவுன்சில் ஆகியவற்றை அமைப்பதற்கான விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கான ஊதிய பட்டுவாடா முறை, வேலை வழங்காதபட்சத்தில் அளிக்கப்பட வேண்டிய வேலையின்மைபடி குறித்த நெறிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

நிர்வாக செலவுகள், பொதுமக்கள் குறைதீர் கட்டமைப்பு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மேலாண்மை விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.

உறுதி ம ஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் படிப்படியாக மாற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய 'வி.பி., ஜி ராம் ஜி' திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும்.

மாநில அரசுகள் தங்களின் புதிய திட்டங்களை அறிவிக்கும் இடைப்பட்ட மாற்றுக் காலத்தில், தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் இந்த வரைவு விதிகள் உறுதி செய்யும்.

மேலும், பழைய திட்டத்தின் கீழ் 'இ.-கே.ஒய்.சி.,' எனப்படும், அடையாளம் சரிபார்ப்பு பணி முடிக்கப்பட்ட தொழிலாளர்களின் வேலை அட்டைகள், புதிய திட்டத்திலும் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும், தொழிலாளர்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் ஊரக வளர்ச்சி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசுகள், பல்வேறு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வரைவு விதிகளை பரிசீலித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அரசுக்கு கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us