ADDED : ஜூன் 20, 2026 04:31 AM

மரபணு குறைப்பாட்டால் ஏற்படும், 'சிக்கில் செல்' ரத்தசோகை நோய், மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சியுடன், 2047ம் ஆண்டுக்கு முன்னதாகவே ஒழிக்கப்படும் என நம்புகிறேன். இந்நோய், அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுவதால், அனைத்து மாநில அரசுகளும் இதை அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
திரவுபதி முர்மு ஜனாதிபதி
வளர்ச்சி மையமாக திகழும்!
நிலையான விவசாயம் மற்றும் இயற்கை விளைப்பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் நம் நாட்டின் அடுத்த வளர்ச்சி மையமாக, வடகிழக்கு பிராந்தியம் திகழும். விவசாயத்தின் எதிர்காலம், அதிகளவில் உற்பத்தி செ ய்பவர்களுக்கானது மட்டுமல்ல; உயர்தரப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கானதும் கூட.
நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,
நன்றி மறந்தவர்கள்!
லோக்சபா தேர்தலில், சிலரின் உதவியால் வென்ற எம்.பி.,க்கள், இப்போது அவர்களுக்கே துரோகம் இழைக்கின்றனர். வெட்கமற்ற, நன்றி மறந்தவர்களின் இந்த கேவலமான அரசியலை, மஹாராஷ்டிரா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இந்த இருளில், ஒளியை வழங்கக்கூடியது, நம் 'எரியும் தீப்பந்தம்' சின்னம் மட்டுமே.
ஆதித்யா தாக்கரே மஹாராஷ்டிரா எம்.எல்.ஏ., உத்தவ் சிவசேனா பிரிவு
