ADDED : மே 13, 2026 03:15 AM

மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வும் தேர்தல் கமிஷனும் இணைந்து திருட்டு சந்தை நடத்துகிறது. இங்கு, புதிய தலைமை செயலராக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வாலை நியமித்ததன் மூலம் இந்த கூட்டுச்சதியை மறைக்கும் முயற்சியை கூட அவர்கள் மேற்கொள்ளவில்லை.
ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,
அரசியல் ஆதாயம்!
மேற்காசியாவில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். இதை, தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சியினர் விமர்சிப்பது துரதிருஷ்டவசமானது. இந்த நெருக்கடி நேரத்தில், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
சுதான்ஷு திரிவேதி செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,
பா.ஜ.,வுக்கு அச்சம்!
பா.ஜ.,வுக்கும் பிரதமர் மோடிக்கும் ராகுல் மீது ஒருவித அச்சம் உள்ளது. அவரின் பிம்பத்தை களங்கப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு நிறுவனங்களை கூட பயன்படுத்த ஆளும் அரசு துணிந்து செயல்படுகிறது. ஆனால், அவரின் பிம்பம் வலுப்பெற்றுள்ளது. இதை, அவர்களால் சேதப்படுத்த முடியாது.
ஹரிஷ் ராவத் மூத்த தலைவர், காங்.,
