sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளா காடுகளில் 7 ஆண்டுகளில் 827 யானைகள் உயிரிழப்பு

/

கேரளா காடுகளில் 7 ஆண்டுகளில் 827 யானைகள் உயிரிழப்பு

கேரளா காடுகளில் 7 ஆண்டுகளில் 827 யானைகள் உயிரிழப்பு

கேரளா காடுகளில் 7 ஆண்டுகளில் 827 யானைகள் உயிரிழப்பு

2


ADDED : செப் 03, 2025 09:28 AM

Google News

2

ADDED : செப் 03, 2025 09:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொச்சி: கேரளா காடுகளில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 827 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

கேரளா காடுகளில் காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. பெரும்பாலான யானைகள் இயற்கையாக மரணம் அடைந்தாலும் சில யானைகள் மனித தாக்குதல் மற்றும் தொந்தரவு ஆளாகி உயரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 827 காட்டு யானைகள் இறந்துள்ளன என கேரள வனத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

அவற்றில் 84 யானைகள் உயிரிழப்புகளுக்கு மனித தாக்குதல் காரணமாக இருந்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான யானைகள் இயற்கையான காரணங்களால் இறந்தாலும், காட்டில் வசிக்கும் மனித தாக்குதலுக்கு ஆளாகும் சூழல் நிலவுகிறது. சில யானைகள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கின்றன.

வெடிபொருட்கள் அல்லது பூச்சிக்கொல்லிகள் பூசப்பட்ட அன்னாசி போன்ற பழங்களை சாப்பிட்டு யானைகள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. மனித வாழ்விடங்களுக்கு வழி மாறியோ அல்லது உணவு தேடி வரும்போது காட்டு யானைகள் உள்ளூர் கிராமவாசிகளால் துன்புறுத்தப்படுகின்றன.

கடந்த கால நிகழ்வுகள்….!

2019ம் ஆண்டில் மனித தாக்குதல் மற்றும் தொந்தரவுக்கு ஆளாகி 12 யானைகள் இறந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டில் 18 ஆக அதிகரித்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா காடுகளில் காட்டு யானைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயிரிழக்கும் சம்பவங்கள் வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us