sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

12 பொருட்களுக்கு மட்டுமே 40% வரி! 5 மற்றும் 18% வரி பலனை மக்களுக்கு கொடுக்க சொல்கிறார்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

/

12 பொருட்களுக்கு மட்டுமே 40% வரி! 5 மற்றும் 18% வரி பலனை மக்களுக்கு கொடுக்க சொல்கிறார்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

12 பொருட்களுக்கு மட்டுமே 40% வரி! 5 மற்றும் 18% வரி பலனை மக்களுக்கு கொடுக்க சொல்கிறார்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

12 பொருட்களுக்கு மட்டுமே 40% வரி! 5 மற்றும் 18% வரி பலனை மக்களுக்கு கொடுக்க சொல்கிறார்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

14


UPDATED : செப் 03, 2025 09:06 PM

ADDED : செப் 03, 2025 03:53 AM

Google News

14

UPDATED : செப் 03, 2025 09:06 PM ADDED : செப் 03, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: “இப்போது, 5, 12, 18, 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., 5, 18, 40 என, மூன்று அடுக்குகளாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும்,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள ஜவுளித்துறை தொழிலதிபர்களுடன், சென்னையில் நேற்று அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகி விட்டதால், அதிலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சீர்திருத்தங்கள் மேற் கொள்ள வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

சாத்தியம் அதன் அடிப்படையில், அனைத்து தரப்பினருக்கும், அனைத்து பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், புத் தம் புதிதாக ஜி.எஸ்.டி., விதிப்பு மாற்றி அமைக்கப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி 1ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலையே, ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம் செய்வதற்கான பணிகள் துவங்கி விட்டன. இன்றும், நாளையும் நடக்கும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு சில முன் மொழிவுகளை முன் வைக்க உள்ளது. அதில், ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தீர்வு இருக்கும்.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்கள், நடுத்தர மக்கள் வாங்கும் கார், பிரிஜ் போன்ற பொருட்களின் விலை குறையும் வகையில், ஜி.எஸ்.டி.,யில் மாற்றங்கள் இருக்கும். விலையை குறைப்பதோடு, வரி விதிப்பு முறையும் எளிதாக்கப்படும்.

அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி விதிப்பு சாத்தியம் இல்லாததால், மூன்று அடுக்குகளாக வரி விதிப்பு இருக்கும்; 5 சதவீத வரி தொடரும்; 12 சதவீத வரி நீக்கப்படுகிறது. 12 சதவீத வரி விதிப்பில் இருக்கும் 99 சதவீத பொருட்கள், 5 சதவீத வரிக்குள் வந்துவிடும்.

சில உணவு பொருட்கள் பூஜ்ஜியம் சதவீதத்திற்கு வந்துவிடும்; 28 சதவீத வரியும் இருக்காது. இதிலுள்ள, 90 சதவீத பொருட்கள், 18 சதவீதத்திற்கு வந்து விடும். இந்த அளவுக்கு வரி குறைப்பு என்பது, இந்திய வரலா ற்றிலேயே இதுவரை நடந்ததில்லை.

நாளை அறிவிப்பு


இந்த அளவுக்கு வரி குறைப்பு சாத்தியமா என்று கேட்கலாம். பிப்ரவரி 1ம் தேதி தாக்கலான பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரும்பாலான பொருட்கள், 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுகின்றன.

வரி குறைப்பில், இது வரலாற்று புரட்சி. 28 சதவீத வரியில் இருக்கும் 12 பொருட்கள், 40 சதவீத வரிக்குள் கொண்டு வரப்படும். 40 சதவீத வரியா என்று கேட்கலாம். ஆனால், இந்த பொருட்களுக்கு, 28 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன், 88 சதவீதம் வரி இருந்தது. இப்போது, 40 சதவீதத்திற்குள் வருகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்

ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலன்கள், மக்களுக்கு சென்று சேரும் வகையில், தொழில், வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். வரி குறைப்பின் பலன் தங்களுக்கு கிடைக்கவில்லை எனில், மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். - நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்



'மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை'

நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜி.எஸ்.டி., கவுன்சிலில், அனைத்து மாநில நிதியமைச்சர்களும் உள்ளனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் தனியாக கூட்டம் நடத்தி, 'ஜி.எஸ்.டி., வரி குறைப்பை வரவேற்கிறோம். ஆனால், மாநிலங்களுக்கான வருவாய் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தபின், மாநில அரசுகளின் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் வருவாய் குறையும். மத்திய அரசின் வருவாய் குறைவு என்பது, நிதியமைச்சரான எனக்கு பெரும் தலைவலி. ராணுவத்திற்கு அதிக நிதி கொடுக்க வேண்டும். இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு, ராணுவத்திற்கான நிதியை கொஞ்சமும் குறைக்க முடியாது. புகையிலை பொருட்கள் மீது, மத்திய அரசு கலால் வரி விதிக்கலாம். ஆனால், மதுபானம், சிகரெட், பெட்ரோல், டீசல், கேளிக்கை வரி, பத்திரப்பதிவு என, மாநில அரசுகளுக்கு வருவாய் அளிக்க பல வழிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கடிதம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், திருப்பூரின் ஏ.இ.பி.சி., எனப்படும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல் அளித்த கடிதத்தின் விபரம்: அமெரி க்க சந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதியை பாதுகாக்க, 'போக்கஸ் மார்க்கெட்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கு, 20 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இந்த சலுகையால், அமெரிக்க ஏற்றுமதி பாதிப்பை சமாளித்து, வர்த்கத்தை தக்கவைக்க முடியும் ஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க, வட்டி சமன்படுத்தும் திட்டத்தை புதிய வடிவில், ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டும். வட்டி மானியத்துக்கான உச்சவரம்பு விதிமுறைகளை தளர்த்தி, வட்டி சமன்படுத்தும் திட்ட சலுகையை, 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் ஏற் றுமதி தொடர்பான அனைத்து கடன்களுக்கும், அசல் தொகையை திருப்பி செலுத்த, இரண்டு ஆண்டு வரை அவகாசம் வழங்க வேண்டும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், பருத்தி பஞ்சில் உற்பத்தியான ஆடைகளுக்கு, பரஸ்பரம் வரி விலக்கு சலுகை வழங்க, அமெரிக்காவிடம் கோரிக்கை வைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us