'மாஜி' காதலியை பார்க்க சென்று அடி வாங்கிய நபர் உயிரிழப்பு
'மாஜி' காதலியை பார்க்க சென்று அடி வாங்கிய நபர் உயிரிழப்பு
ADDED : மே 28, 2026 02:07 AM
பேட்ராயனபுரா: முன்னாள் காதலியை சந்திக்க சென்று, அவரது கணவர் மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்டு, காயமடைந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார்.
ராம்நகரின், பி.டி.காலனியில் வசித்தவர் முகமது காசிம், 27. இவரும், இதே பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணும், நான்கு ஆண்டு களாக காதலித்தனர் என கூறப்படுகிறது.
இவர்களின் காதலை ஏற்காத, பெண்ணின் பெற்றோர், பெங்களூரின், பேட்ராயனபுராவின், சாமண்ணா கார்டனில் வசிக்கும் வேறு ஒரு இளைஞருக்கு, திருமணம் செய்து கொடுத்தனர். அதன் பின் முகமது காசிம், தன் பணியை கவனித்து கொண்டு இருந்தார்.
இந்நிலையில் தன்னை சந்திக்க வரும்படி, முகமது காசிமுக்கு, முன்னாள் காதலி அழைத்தார். முகமது காசிமும், மே 25ம் தேதியன்று பெங்களூருக்கு வந்தார்.
சாமண்ணா கார்டனில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு சென்றார். அவருடன் தனியாக பேசி கொண்டிருந்தார். இதை கண்டு கோபமடைந்த அவரது கணவரும், குடும்பத்தினரும் முகமது காசிமை கண் மூடித்தனமாக தாக்கினர்.
பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை செய்து கொள்ளாமல், ராம்நகரின் பி.டி., காலனியில் உள்ள தன் வீட்டுக்கு சென்று, படுத்து கொண்டார். வலி அதிகரித்ததால் குடும்பத்தினர் இவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி, நேற்று மதியம் முகமது காசிம் உயிரிழந்தார். இது குறித்து, பேட்ராயனபுரா போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.
