PUBLISHED ON : செப் 13, 2025

என் வயது 39; தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். இதழ்களுக்கு கவிதை, கட்டுரைகளும் எழுதி வருகிறேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். புதிர் போட்டியில் பரிசுப்பெற்றதால் ஊக்கம் பெற்றுள்ளேன்.
சிறுவர்மலர் இதழின் ஒவ்வொரு பக்கமும் அறிவு செல்வமாக உள்ளன. பள்ளிக்கால நினைவுகளை தாங்கிய, 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள், நல் உணர்வை ஊட்டுகின்றன. அரியத் தகவல்களை திரட்டி தரும், 'அதிமேதாவி அங்குராசு!' அறிவின் திறவுகோலாக விளங்குகிறது. வாய்விட்டு சிரிக்க வைக்கும் 'மொக்க ஜோக்ஸ்!' தமாசுகள் கவலையை போக்குகின்றன.
சிறுவர், சிறுமியரை நல்வழிப்படுத்தும் வகையில் தொடர்கதையும், நீதிக்கதைகளும் உள்ளன. குழந்தைகள் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் இடம்பெறும், 'உங்கள் பக்கம்!' கற்பனை வளத்தை பெருக்குகிறது. சத்து மிக்க உணவை அடையாளம் காட்டும், 'மம்மீஸ் ெஹல்த் கிச்சன்!' பகுதி, சந்தேகங்களை போக்கும், 'இளஸ் மனஸ்!' என, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக திகழ்கிறது சிறுவர்மலர்.
இதனால் தான் வாசகர் மனதில் முதலிடம் பிடித்துள்ளது. சிறுவர்மலர் இதழ் மென்மேலும் வளர மனதார வாழ்த்துக்கிறேன்.
- ஆ.செந்தில், திருவள்ளூர்.
தொடர்புக்கு: 93604 88288