ADDED : மே 16, 2026 06:27 AM

அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார், புத்துார்வயல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். அவர் மகன் சமீத்,13. இவர்கள், கூடலுாரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புத்தவயல் நோக்கி சென்றுள்ளனர்.
அப்போது, சாலையில் பணம் கிடைப்பதை பார்த்த சமீத் தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதனை எடுத்த பார்த்த போது, 48 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிய வந்தது. அத்தொகையை கூடலுார் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில்,' அந்த தொகை புத்துார்வயலை சேர்ந்த, வர்கீஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. தொடர்ந்து தொகையை வர்கீசின் தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சண்முகம் மற்றும் அவர் மகன் சமீத் ஆகியோருக்கு, இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், எஸ்.ஜ., கவியரசு ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
