ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

* ஞானம் என்பது மனிதனிடம் இயல்பாக இருக்கும் விஷயம். அது வெளியில் இருந்து வருவது கிடையாது.
* தாயும் தந்தையும் வாழ்வில் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றால் கடவுளும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்.
* அன்பின் மூலமாக செய்யப்படும் எந்தப் பணியும் இறுதியில் நிலையான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
* தன்னைத் தானே மனிதன் வெறுக்கக்கூடாது. இல்லாவிட்டால் அழிவினுடைய வாசல்கள் அப்போதே திறந்து விடப்படும்.
* பிறரிடம் பெற்றுக் கொள்வதால் பயனில்லை. மாறாக கொடுத்து மகிழ்பவனே பேறுபெற்றவன்.
* தவறுகளைப் பெரும்பேறாக கருதிப் போற்றுங்கள். நம்மை அறியாமலேயே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் அவை தான்.
* தன்னை மறந்து, மன ஒருமையுடன் செயலில் ஈடுபட்டால், அந்தப்பணி அழியாத சிறப்பை பெறும்.
* போராட்டம் இல்லாத வாழ்வில் எந்தவிதமான சுவையும் இருப்பதில்லை. தோல்வியும் வெற்றிக்கான கதவுகளைத் திறந்தே விடுகிறது.
- விவேகானந்தர்