
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் நம்பிக்கை பரவட்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு உன்னால் சாதிக்க முடியும்.
* ஒருபோதும் உணர்ச்சி வசப்படாதே. இதனால் பொறுமை இழந்து முடிவு எடுக்க முடியாமல் தடுமாற நேரிடும்.
* பிறர் உன்னை பாராட்ட வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்காதே. நல்லதை பாராட்ட அவர்களுக்கு மனமில்லை.
* கடவுள் யாரையும் தண்டிக்க விரும்பமாட்டார். ஏனென்றால் அவர் அன்பே உருவானவராக இருக்கிறார்.
* மனிதனுக்கு கடவுள் உணர்வு ஒன்று மட்டுமே உண்மையான ஒரே உதவி. மற்றதெல்லாம் வெறும் கற்பனையே.
ஸ்ரீஅன்னை