ADDED : அக் 19, 2009 04:30 PM

<P>* உணவானது எளியதாக, மிதமான அளவுடன் இருக்க வேண்டும். கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்ணப் பழகிக் கொள்ளுங்கள். சரிவிகித உணவாக, சத்துள்ள உணவாக சாப்பிடுங்கள். </P>
<P>* தினமும் குறிப்பிட்டநேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. குறிப்பாக யோகாசனம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பு. நீண்ட நடைப்பயிற்சியிலோ அல்லது சுறுசுறுப்பான விளையாட்டுப் பயிற்சிகளிலோ அன்றாடம் ஈடுபட வேண்டும். <BR>* ஏகாதசி, கார்த்திகை போன்ற விரதங்களை கடைபிடிப்பதும், மவுனவிரதத்தை மேற்கொள்வதும், பழஆகாரங்களை உட்கொள்வதும் மனவுறுதியையும் உடல் உறுதியையும் தரவல்லதாகும்.<BR>* நேர்மையாக இருங்கள். உழைத்து சம்பாதியுங்கள். நியாயமான வழியில் அல்லாமல் பணத்தையோ, பொருளையோ யாரிடமும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். <BR>* உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று உள்ள உடைமைகளையும் குறைக்கப் பாருங்கள். எளிய வாழ்க்கையில் தான் உயரிய சிந்தனைகள் உருவாகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள்.<BR>* எல்லா நேரங்களிலும் கடவுளை நினையுங்கள். குறைந்த பட்சம் காலை, மாலையில் கடவுளை தியானிப்பது மிகவும் நன்மை தருவதாகும். <BR><STRONG>-சிவானந்தர்</STRONG> </P>