ADDED : ஜூலை 31, 2013 12:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எந்த செயலிலும் முழு மனதுடன் ஈடுபடுங்கள். பின், அதன் விளைவைப் பற்றி சிந்திக்காமல் பணியாற்றுங்கள்.
* நல்ல ரத்தம் ஓடிக் கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். நல்ல எண்ணம் ஓடிக் கொண்டிருந்தால் இந்த உலகமே பயன் பெறும்.
* தீய எண்ணம் நம்மைத் தாக்காமல் காத்துக் கொள்ள நல்லவர்களுடன் மட்டும் உறவாடுங்கள்.
* எப்போதும் விழிப்புடன் இருங்கள் என்று பெரியவர்கள் உபதேசிக்கிறார்கள். ஏனென்றால், சின்ன விஷயத்தில் கூட பெரிய அனுபவம் நமக்காக காத்திருக்கலாம்.
* நன்மையும், தீமையும் நாம் செய்த செயல்களின் அடிப்படையில், பாவ புண்ணியமாக வந்தடைகின்றன.
* நோய் நீங்க மருத்துவன் கத்தியைப் பயன்படுத்துகிறான். கொலைகாரனுக்கு தீமைக்கு பயன்படுகிறது. நோக்கத்தைப் பொறுத்து பொருளின் பயன்பாடு மாறும்.
- சாய்பாபா