/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
மாதா அமிர்தனந்தமயி
/
ஆன்மிகவானில் பறக்க வழி
/
ஆன்மிகவானில் பறக்க வழி
ADDED : ஜன 28, 2010 03:55 PM

<P>* பிறர் மீது அன்பு காட்டவும், அவர்களுக்கு சேவை செய்யவும் கடவுள் கொடுத்த அரியவாய்ப்பு தான் இம்மனிதப்பிறவி. அத்தகைய வாய்ப்பினை நமக்களித்த கடவுளை நன்றியோடு வணங்கி மகிழுங்கள். <BR>* உண்மையான ஆன்மிகவாதி என்பவன் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்றுதான் எண்ணிக்கொள்வான். அவனுடைய மனதில் எதிர்மறையான எண்ணங்களுக்கு சிறிதும் இடமிருப்பதில்லை.<BR>* நம் மனதில் தூய்மை வந்துவிட்டால் நாம் எண்ணும் எண்ணம், செய்யும் செயல் யாவும் தூய்மை உடையதாகிவிடும். வாழ்க்கைப் பிரச்னைகளைக் கண்டு கலங்காமல் அமைதியோடு அதை எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமையும் பெற்றுவிடும். <BR>* சுயநலமின்மை, அன்பு என்னும் இருசிறகுகளைக் கொண்டுதான் ஆன்மிக உலகில் பறக்கமுடியும். அன்பு இருக்குமிடத்தில் தான் ஆண்டவன் இருப்பான். சுயநலம் இல்லாவிட்டால் எதை செய்ய நினைத்தாலும் இறைவனே முன்நின்று உதவுவான்.<BR>* கடவுள் மீது யாராலும் அசைக்கமுடியாத அளவுக்கு உறுதியான நம்பிக்கை கொள்பவன் எல்லாவகையான தீயசக்திகளில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்வான். <BR><STRONG>-மாதா அமிர்தானந்தமயி</STRONG></P>